Saturday, October 15, 2011

அரைத்துவிட்ட சாம்பார் / Arachu vitta Sambar



தேவையானவை

துவரம்பருப்பு - 1 கப் ( வேகவைத்தது)

வறுத்து அரைக்க

வரமிளகாய் - 4
சீரகம் - அரை ஸ்பூன்
மல்லி - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்
வெந்தயம் - கால் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்

கத்தரிக்காய் - 2
கேரட் - 1
தக்காளி - 2 சிறிது
வெங்காயம் - 1
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
புளி - சிறிது
தேங்காய் - ஒரு சில்

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை

செய்முறை

அரைக்க கொடுத்தவற்றை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து கொள்ளவும்.
பின் வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் பாதி,ஒரு தக்காளி சேர்த்து வதக்கி ஆறியவுடன் அரைத்த பொடியுடன் தேங்காய் ஒரு சில் சேர்த்து மறுபடியும் நன்றாக அரைத்து கொள்ளவும்.
குக்கரில் வேகவைத்த துவரம்பருப்புடன் பொடியாக வெட்டிய காய்கறிகள்,பாதி வெங்காயம்,தக்காளி,புளிக்கரைசல், உப்பு, சாம்பார் பொடி அரைத்த விழுது சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்.
இறக்கும் போதும் சிறிது கொத்தமல்லித்தழை சேர்க்கவும். சுவையான அரைத்துவிட்ட சாம்பார் தயார்.

Friday, October 14, 2011

பருப்பு பொடி / Paruppu Podi



தேவையானவை

கடலை பருப்பு - 1 கப்
துவரம் பருப்பு - 1 கப்
மிளகு - 1 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் - 5 அல்லது 8
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 1 பல்
செய்முறை

இவை அனைத்தையும் வெறும் வாணலியில் ஒவ்வொன்றாக மிதமான தீயில் வறுக்கவும்.


நன்கு ஆறியதும் மிக்ஸ்யில் உப்பு சேர்த்து நைஸாக பொடியாக்கவும்.


சுவையான பருப்பு பொடி தயார்.வெறும் சாதத்தில் கூட நெய் விட்டு சாப்பிடலாம்.