Sunday, January 29, 2012

கறி தோசை / Kari Dosa



தேவையானவை

தோசை மாவு - 1 கப்
முட்டை - 2

கறி மசாலா செய்ய:

சிக்கன் (அ) மட்டன் கீமா - 1/4 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விலுது - 1 ஒரு தேக்கரண்டி
மிளகாய் பொடி- 1/2 தேக்கரண்டி
கறி மசாலா பொடி- 1/4 தேக்கரண்டி
சீரகபொடி - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க:
சோம்பு - 1/4 தேக்கரண்டி
பட்டை - 1

சிக்கன் மசாலா செய்ய:

சிக்கன் கீமாவை கழுவி தண்ணீரில்லாமல் வடிதட்டில் போட்டு தண்ணீரை வடித்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு,பட்டை தாளித்து வெங்காயம் சேர்த்து வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.பின் மிளகாய் பொடி,சீரகபொடி,கறி மசாலா பொடி சேர்த்து வதக்கவும்.

பின்னர் சிக்கன் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.

தண்ணீர் வத்தியதும் நன்கு வதக்கி சிவந்து முறுவலாகும் வரை வைத்து இறக்கவும்.கொத்தமல்லி தூவி இறக்கவும்.


பின்பு ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி அதன் மேல் வதக்கி வைத்துள்ள சிக்கன் மசாலாவை பரவளாக போட்டு

முட்டையை ஊற்றி திருப்பிபோட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.


கறி தோசை ரெடி.இதனை சட்னி, சாம்பாருடன் சாப்பிடலாம்.

2 comments:

Asiya Omar said...

சூப்பர் ரெசிப்பி.

Yasmin said...

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.