Sunday, February 12, 2012

பனீர் டிக்கா மசாலா / Paneer Tikka Masala



தேவையானவை

பனீர் - 1 கப் ( பொரித்தது )
பெரிய வெங்காயம் - 1 ( விழுதாக )
தக்காளி - 2 ( விழுதாக )
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பட்டாணி - சிறிது
கசூரி மேத்தி பவுடர் - 1 தேக்கரண்டி
தந்தூரி மசாலா பவுடர் - 1 1/2 தேக்கரண்டி
பால் - 1 1/2 கப்
சீனி - 1 /4 ஸ்பூன்
சாய் சீரா - 1/2 தேக்கரண்டி
வெண்ணெய் (அ) எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு

செய்முறை

வாணலியில் 3 தேக்கரண்டி வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சாய் சீரா மற்றும் சிறிது கசூரி மேத்தி சேர்த்து தாளிக்கவும்.

பின் இஞ்சி பூண்டு விழுது போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.அதனுடன் வெங்காய விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின்னர் தந்தூரி மசாலா பவுடர் சேர்த்து வதக்கி,

தக்காளி விழுது,தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியவுடன் பட்டாணி சேர்த்து கிளறவும்.

பின் பால் 1 1/2 கப் ஊற்றி ஒரு கொதி வந்ததும் பொரித்து வைத்திருக்கும் பனீர் துண்டுகளை போட்டு வேகவிடவும்.

சிறிது வெந்தவுடன் 1/4 ஸ்பூன் சீனி சேர்க்கவும்.நன்கு கொதித்து எண்ணெய் மேலே வந்தவுடன் கசூரி மேத்தி பவுடர் தூவி இறக்கவும்.

நாண், சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றிற்கு பொருத்தமான சைட் டிஷ்.

No comments: